பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

‛சட்டமும் நீதியும்' என்ற வெப்சீரிஸில் கதை நாயகனாக நடித்து இருக்கிறார் ‛பருத்திவீரன்' சரவணன். அதில் பாதிக்கப்பட்ட, அதாவது ஐகோர்ட் வளாகத்தில் தீக்குளித்து இறக்கும் ஒருவருக்கு நீதி வாங்கி தருகிற வக்கீல் கேரக்டரில் நடித்து இருக்கிறார். பாலாஜி செல்வராஜ் இயக்கியிருக்கிறார்.
இந்த கேரக்டர் குறித்து சரவணன் பேசுகையில் ''நான் டிராபிக் ராமசாமி மாதிரி நீதிக்காக போராடுகிற கேரக்டரில் நடித்து இருப்பதாக பலர் பாராட்டுகிறார்கள். நிஜ டிராபிக் ராமசாமியுடன் எனக்கு பழக்கம் உண்டு. அவர் செய்த சாதனைகள் அதிகம். இந்த வெப்சீரிஸில் நீதி கிடைப்பதாக கதை முடிகிறது. ஆனால், நிஜத்தில் வேறு மாதிரி. நானே சில வழக்கு போட்டு இருக்கிறேன். இன்னமும் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. 5 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். நமக்கு நீதி கிடைக்கும், ஆனால் சற்றே தாமதமாக கிடைக்கும். நம் நாட்டில் போடப்படுகிற வழக்குகள் அதிகம். நீதிமன்றம் குறைவு. எனவே, அதற்கு காலம் எடுத்துக்கொள்ளும். நல்ல கேரக்டர் கொடுத்து, நல்ல கதையை கொடுத்த இயக்குனருக்கு நன்றி. 15 நாட்களுக்குள் இந்த வெப்சீரிஸை நடித்து கொடுத்தோம்'' என்றார்.