இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மலையாள நடிகையான நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றாலும் இந்து மதத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கிய நயன்தாரா தாங்கள் காதலித்து வரும்போதே அவருடன் சேர்ந்து பல இந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்கள் மகன்கள் உயிர், உலக் உடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்கள், அப்போது விக்னேஷ் சிவனும், மகன்களும் தரையில் சாஷ்டாங்கமாக படுத்து முருகனை வழிபட்டுள்ளார்கள். அதேபோல் நயன்தாரா முட்டி போட்டு அமர்ந்து முருகனை வழிபட்டுள்ளார். இது குறித்த புகைப்படம், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.