மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் |

தமிழ் திரையுலகில் 35 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கிங் காங். அதிசய பிறவி படத்தில் ரஜினியின் முன்னால் இவர் ஆடும் நடனம் இவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. பின்னர் வடிவேலு படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து பெயர் பெற்றார்.. சமீபத்தில் இவரது மகள் திருமணம் நடைபெற்றது.. இதற்காக திரையுலகை சேர்ந்த விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு அவர் நேரிலேயே சென்று அழைப்பிதழ் வைத்தார். அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகின. அவர் பத்திரிகை அழைப்பு கொடுத்த பிரபல நடிகர்கள் பெரும்பாலும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
அதேசமயம் எதிர்பாராத விதமாக அந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தது பேசு பொருளானது. அதன் பிறகு இது குறித்து கிங்காங் கூறும் போது, “அன்பின் நிமித்தமாகவும் மரியாதை நிமித்தமாகவும் அனைவருக்கும் சென்று அழைப்பிதழ் வைத்தேன். ஒவ்வொருவருக்கும் அந்த தேதியில் வெவ்வேறு வேலைகள் நிச்சயம் இருந்திருக்கலாம். அதனால் அவர்களால் வர முடியாமல் போய் இருக்கலாம். நடிகர்கள் பாக்யராஜ், தேவயானி போன்ற பலர் திருமண மண்டபம் வரை வந்து கூட்டம் காரணமாக உள்ளே வர முடியாமல் திரும்பிச் சென்ற செய்தியும் எனக்கு வந்தது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் கிங்காங் வீட்டிற்கு நேரில் சென்று மணமக்களை சந்தித்து வாழ்த்தி பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். கிங்காங்கின் மகள் தீவிரமான சிவகார்த்திகேயன் ரசிகை. தனது அபிமான நடிகர் திருமணத்திற்கு வரவில்லையே என்ற வருத்தத்தில் இருந்ததாகவும் ஆனால் தனி ஒருவராக தன் வீட்டிற்கே தேடி வந்து அவர் வாழ்த்தியது தன் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்றும் அவரது மகள் கூறியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.