நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
‛ஆஷ்ரம்' வெப்சீரிஸ் புகழ் நடிகை திரிதா சவுத்ரி தற்போது படங்களிலும் பிஸியாக நடிக்கிறார். அவர் நடித்துள்ள சஸ்பென்ஸ், திரில்லர் படமான ‛சோ லாங் வேலி', ஜூலை 25ல் தியேட்டர்களில் வெளியாகிறது. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மான் சிங் இயக்கி உள்ளார். இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிராக உள்ளார். அவர் அளித்த பேட்டி...
போலீஸாக நடித்தது பற்றி அவர் கூறுகையில், ‛‛போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த பிறகு போலீஸ் மீதான மரியாதை இன்னும் அதிகரித்துள்ளது. ஏனெனில் அவர்கள் அனைவரும் நமக்காகவும், சமூகத்திற்காகவும் நிறைய உழைக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை எளிதானது அல்ல. அவர்கள் குடும்பத்துடன் அதிகநேரம் செலவிட முடிவது இல்லை. தங்களது கடமைக்காக நிஜ வாழ்க்கையில் நிறைய சமரசங்களை அவர்கள் செய்ய வேண்டி உள்ளது''.
பெண் போலீஸ் படம் குறித்து அவர் கூறும்போது, ‛‛நான் சமீபத்தில் கஜோலின் தோ பட்டி படம் பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது. அதில் தனக்கு வரும் வழக்குகளை அவர் சிறப்பான முறையில் தீர்த்து வைத்தார்''.
'ஆஷ்ரம்' புகழ் நடிகை என்று அழைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த திரிதா, ‛‛இதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு மட்டுமல்ல, இதுபோன்று பல நடிகர்களுக்கும் நடக்கிறது. இதுதான் மக்களின் அன்பு என்று உணர்கிறேன். வரும் காலங்களில் வேறு படங்கள் அல்லது தொடர்களில் நடித்தால் அந்த படங்கள் அல்லது தொடரின் பெயரை குறிப்பிட்டு என்னை அழைக்கலாம் அல்லது அடையாளம் காணலாம் என்று நம்புகிறேன்''.
இவ்வாறு திரிதா கூறினார்.