கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் |

இப்போதெல்லாம் இந்திய நடிகர்கள் ஹாலிவுட் படங்களில் நடிப்பது சர்வசாதரணமாகி விட்டது. ஆனால் 1930களில் இதெல்லாம் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. காரணம் அன்று ஹாலிவுட் படங்களை முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மட்டுமே பார்த்தார்கள். பொது மக்கள் பார்வைக்கு வரவில்லை.
இப்படியான நிலையில் 1937ம் ஆண்டு எலிபண்ட் பாய் என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார் சாபு தஸ்தகீர். கர்நாடக மாநில் மைசூரை சேர்ந்தவர். சிறுவனாக இருந்தபோது யானை பாகனாக இருந்ததால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இந்த படத்தின் மூலம் புகழ்பெற்ற அவர், அடுத்து 'தி ட்ரம்' (1938), 'தி தீப் ஆப் பாக்தாத்' (1940), 'ஜங்கிள் புக்' (1942), 'அரேபியன் நைட்ஸ்' (1942) உள்பட பல படங்களில் நடித்தார். 1948-ம் ஆண்டு 'சாங் ஆப் இந்தியா' என்ற படத்தில் நடித்த மர்லின் கூப்பர் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் அமெரிக்காவில் குடியேறிய இவர் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் அந்நாட்டின் விமானப்படையில் சேர்ந்து பணியாற்றினார். அவருடைய வீரம் மற்றும் துணிச்சலுக்காக விருதையும் பெற்றுள்ளார். 1963ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.
பலரும் அறியாத இவருடைய வாழ்க்கை தற்போது சினிமாவாகிறது. அல்மைட்டி மோஷன் பிக்சர்ஸ் இதனை தயாரிக்கிறது. இதற்கான உரிமத்தை சாபு தஸ்தகீரின் குடும்பத்திடம் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது முதல்கட்ட பணிகள் நடந்து வருகிறது.