தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய ஆளுமை அக்னினேனி நாகேஸ்வரராவ். அவரது மகன் நாகார்ஜூனா, பேரன்கள் அகில், நாக சைதன்யா இப்போது நடித்து வருகிறார்கள். தற்போது அவரது நூற்றாண்டு தொடங்கி உள்ளது. இதை முன்னிட்டு இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டர் செயின் நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது. பிலிம் ஹெரிட்டேஜ் நிறுவனத்துடன் இணைந்து இதனை நடத்துகிறது.
வருகிற செப்டம்பர் 20 முதல் 22 வரை நடைபெறும், இந்த விழாவில் நாகேஸ்வரராவின் புகழ்பெற்ற வெற்றிப் படங்களை இந்தியா முழுவதும் உள்ள தங்கள் தியேட்டரில் திரையிடுகிறது. இந்த விழாவில் தேவதாசு, மாயாபஜார், பார்யா பார்த்தலு, குண்டம்மா கதை, டாக்டர் சக்கரவர்த்தி, சுடிகுண்டலு, பிரேமாபிஷேகம், பிரேம் நகர் மற்றும் மனம்க் உள்ளிட்ட பல படங்கள் பெரிய திரையில் திரையிடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட 31 நகரங்களில் இந்த திரையிடல் நடக்கிறது.




