வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய ஆளுமை அக்னினேனி நாகேஸ்வரராவ். அவரது மகன் நாகார்ஜூனா, பேரன்கள் அகில், நாக சைதன்யா இப்போது நடித்து வருகிறார்கள். தற்போது அவரது நூற்றாண்டு தொடங்கி உள்ளது. இதை முன்னிட்டு இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டர் செயின் நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது. பிலிம் ஹெரிட்டேஜ் நிறுவனத்துடன் இணைந்து இதனை நடத்துகிறது.
வருகிற செப்டம்பர் 20 முதல் 22 வரை நடைபெறும், இந்த விழாவில் நாகேஸ்வரராவின் புகழ்பெற்ற வெற்றிப் படங்களை இந்தியா முழுவதும் உள்ள தங்கள் தியேட்டரில் திரையிடுகிறது. இந்த விழாவில் தேவதாசு, மாயாபஜார், பார்யா பார்த்தலு, குண்டம்மா கதை, டாக்டர் சக்கரவர்த்தி, சுடிகுண்டலு, பிரேமாபிஷேகம், பிரேம் நகர் மற்றும் மனம்க் உள்ளிட்ட பல படங்கள் பெரிய திரையில் திரையிடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட 31 நகரங்களில் இந்த திரையிடல் நடக்கிறது.




