வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நடிகர் மம்முட்டி படங்களில் நடிப்பதை தாண்டி, தான் நடத்தி வரும் அறக்கட்டளை மூலமாக பல்வேறு உதவிகளை இயலாதவர்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் அறக்கட்டளை ஒன்றின் சார்பாக காது கேளாதவருக்கான கருவியை (ஹியரிங் எய்டு கருவி) அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார் மம்முட்டி. அப்போது சில வருடங்களுக்கு முன்பு தனது படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டார் மம்முட்டி.
கடந்த 2009ல் மலையாளத்தில் 'லவ்டு ஸ்பீக்கர்' என்கிற படத்தில் காது கேளாத மாற்றித்திறனாளியாக நடித்திருந்தார் மம்முட்டி. அந்த படத்தில் பெரும்பாலும் 'ஹியரிங் எய்டு' அணிந்து கொண்டுதான் மற்றவர்கள் பேசுவதை அவர் புரிந்து கொள்வார். அந்த சமயத்தில் படப்பிடிப்பில் நிஜமாகவே இதுபோன்று காது கேளாத மாற்றுத்திறனாளி தொழிலாளி ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்காக மம்முட்டி ஹியரிங் எய்டு ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
அதை காதில் பொருத்தியதும் முதன் முதலாக சப்தத்தை கேட்டு உணர்ந்த அந்த தொழிலாளி அதிர்ச்சி அடைந்து போய் அந்த ஹியரிங் எய்டை கழட்டி தூக்கி வீசி விட்டாராம். இந்த நிகழ்வை கூறிய மம்முட்டி, “அத்தனை நாட்களாக சப்தம் எதையுமே கேட்டிராத அந்த நபருக்கு முதன்முதலாக அதை கேட்டபோது அதன் தாக்கத்தை அவரால் உடனடியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவர் அதை கழட்டி வீசினார்” என்று கூறியுள்ளார்.




