'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது காதலியான நடிகை பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் தொடர்ந்து ஆபாச செய்திகள் அனுப்பி டார்ச்சர் செய்தார் என்பதற்காக அவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் இருக்கும்போது தனது வழக்கறிஞர் மூலமாக பல சலுகைகள் வேண்டும் என அவர் கேட்டதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஆனால் அதே சமயம் மறைமுகமாக அவருக்கு சிறையில் அனைத்து வித வசதிகளும் கிடைத்தன. அது குறித்த வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் பெல்லாரியில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார்.
அவர் இங்கே இருந்த சமயத்தில் அவருக்கு உதவியாக செயல்பட்டவர் வில்சன் கார்டன் நாகா என்கிற கேங்ஸ்டர் தான். அதனால் அந்த பகுதியில் எப்போதும் போலீசார் பெரிய அளவில் சோதனை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தற்போது கர்நாடக போலீசார் தர்ஷன் இருந்த அந்த சிறைப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட போது அங்கே 15 மொபைல்கள், 7 எலக்ட்ரிக் அடுப்புகள், 5 கத்திகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அது மட்டுமல்ல ஆயிரக்கணக்கில் பணமும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களும் சிக்கின. இவையெல்லாம் தர்ஷன் அங்கிருந்த போது அவருக்காக கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது.