தள்ளிப்போனது டாக்சிக்: அந்த இடைவெளியில் வேறு படங்கள் வருமா? | இது, இரண்டாவது இன்னிங்ஸா? சென்னையில் பாவனா பேட்டி | திருமண வரவேற்பு : வேட்டி சட்டையில் விஜய், புடவையில் ராஷ்மிகா | பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? | 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா | தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம் | கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் | அபுதாபியில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பிய சுவாசிகா | வரலட்சுமியின் 'சரஸ்வதி' படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் | ஹைதராபாத் 'ஷிப்ட்' ஆன லோகேஷ் கனகராஜ் 'டீம்' |

ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள 'கூலி' படம் 500 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் அடுத்தபடியாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க அவர் தயாராகி வருகிறார்.
இந்நிலையில் தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அப்போது அவரிடத்தில் ஏஐ தொழில்நுட்பம் குறித்து மாணவர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இளைஞர்கள் சினிமா பார்த்துதான் வாழ்க்கையை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது தவறு. சினிமா நம்மை இன்ப்ளுயன்ஸ் செய்தால் நாம் வளர்ந்த விதமே தவறாகி போகும்.
மேலும், சினிமாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்காது. ஆனால் இந்த டெக்னாலஜியை பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையான அளவு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். டெக்னாலஜி வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் அதை எந்த அளவுக்கு நாம் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம்முடைய செயல்பாட்டில் தான் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.




