சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

நடிகர் ராம்சரண் தெலுங்கில் தற்போது பெத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் மைசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மைசூரில் தங்கியிருந்த கர்நாடக முதல்வரான சித்ராமையாவை மரியாதை நிமித்தம் நேரில் சந்தித்துள்ளார் ராம்சரண்.
இது குறித்து புகைப்படங்களுடன் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், தெலுங்கு நடிகர் ராம்சரண் பெத்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துவரும் நிலையில், மைசூரில் என்னை சந்தித்து உரையாடினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சரான சந்தோஷும் ராம்சரணை படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.