நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
நடிகர் ராம்சரண் தனது தந்தை சிரஞ்சீவியை போலவே இன்று தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய முன்னணி நடிகராக வளர்ந்து விட்டார். குறிப்பாக அடுத்தடுத்து ராஜமலியின் டைரக்ஷனில் இரண்டு படங்களில் நடித்தது அவரை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்று விட்டது. அதேசமயம் பொது நிகழ்ச்சிகளில் மிகவும் எளிமையாக கலந்து கொள்ளும் ராம்சரண் தனது தந்தையுடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருடன் அவ்வளவு அன்யோனியமும் அன்பும் காட்டுவதையும் பல நிகழ்ச்சிகளில் நாம் பார்த்திருக்க முடியும். அதே சமயம் இந்த அளவிற்கு அனைவரிடமும் ராம்சரண் மரியாதையாக நடப்பதற்கு சிறுவயதிலேயே அவரது தந்தை அவருக்கு கொடுத்த ஒரு ட்ரீட்மெண்ட் தான் காரணம் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ராம்சரண்.
இது குறித்து அவர் கூறும்போது, “எனக்கு கிட்டத்தட்ட எட்டு வயது ஆகும் சமயத்தில் எங்களது கார் டிரைவர் மற்றும் வாட்ச்மேன் ஆகியோர் பேசும் சில வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அடிக்கடி அவர்கள் அதை பேசுவதை பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்று எனது சித்தப்பா நாகபாபுவிடம் அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். அப்போதுதான் சரியாக எனது தந்தையும் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினார். உடனே எனது சித்தப்பா என்னை அழைத்துக் கொண்டு என் தந்தையின் அறிகு சென்றார். அவரிடம் நான் சொன்ன வார்த்தைகளை கூறி இதற்கு விளக்கம் கேட்கிறான் என்று சொன்னார். உடனே சித்தப்பாவை வெளியே போக சொன்னார் அப்பா. எனக்கு அதற்கான காரணம் தெரியவில்லை.
அதன் பிறகு கதவை பூட்டிவிட்டு அவருக்கு அவருடைய போலீஸ் தந்தை ஓய்வு பெற்றபின் பரிசாக கொடுத்திருந்த போலீஸ் பெல்டால் அடி பின்னி எடுத்து விட்டார். அதன்பிறகு இது போன்ற வார்த்தைகளை இனி ஒருபோதும் பேசக்கூடாது என்று அறிவுரை கூறினார். அது மட்டுமல்ல வீட்டில் தாயுடனோ அல்லது வீட்டில் உள்ள மற்ற பெண்களுடனோ சச்சரவில் ஈடுபடும் ஆண்களையும் அவருக்கு அறவே பிடிக்காது. அந்த அளவிற்கு நன்னடத்தை விதிகளை கண்டிப்பாக கடைபிடித்து வந்தார் எனது தந்தை” என்று கூறியுள்ளார் ராம் சரண்.