தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
காதலை மையப்படுத்தி வந்த படங்கள் ஏராளம். காதலர்களைச் சேர்த்து வைப்பதற்குப் போராடிய படங்களும் நிறைய உண்டு. இந்த இரண்டையும் மையப்படுத்தி வெளிவந்த படம் தான் 'வைதேகி காத்திருந்தாள்'. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கும் படமென்றால் மென்மையான கதை, வலுவான திரைக்கதை, சிரிக்க வைக்கும் காட்சிகள், சென்டிமெண்ட் சீன்கள், இசைக்கு முக்கியத்துவம் என கலந்துகட்டி இருக்கும். இதுவும் அப்படியான படம் தான்.
தனது அடுத்த படத்திற்கு இளையராஜாவை அணுகினார் ஆர்.சுந்தர்ராஜன். அப்போது இளையராஜா "வெவ்வேறு படங்களுக்கு தயார் செய்த 6 பாட்டு தரேன். அதற்கேற்றவாறு ஒரு கதையை தயார் செய்து கொள்" என்று கூறிவிட்டார். அப்படி பாடலுக்காக உருவான கதை தான் இந்த படம். 'ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு', 'இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ', 'மேகம் கருக்கையிலே', 'அழகு மலராட', 'காத்திருந்து காத்திருந்து...' என அத்தனை பாடல்களும் ஹிட்டானது.
ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த்தை பெர்பார்மன்ஸ் ஹீரோவாக அடையாளம் காட்டியது. வெள்ளச்சாமியாக விஜயகாந்த், காதலி வைதேகி ஆக பரிமளா, விதவை வைதேகி ஆக ரேவதி நடித்தனர். கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளும் பெரிய அளவில் ஹிட்டானது.
1984ம் ஆண்டு தீபாவளியன்று இப்படம் வெளியானது. தீபாவளிப் படங்களில், நல்ல கதையாலும், சிறப்பான நடிப்பாலும், காமெடியாலும் முக்கியமாக இளையராஜாவின் இசையாலும், வெள்ளிவிழா படமானது.