டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
காதலை மையப்படுத்தி வந்த படங்கள் ஏராளம். காதலர்களைச் சேர்த்து வைப்பதற்குப் போராடிய படங்களும் நிறைய உண்டு. இந்த இரண்டையும் மையப்படுத்தி வெளிவந்த படம் தான் 'வைதேகி காத்திருந்தாள்'. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கும் படமென்றால் மென்மையான கதை, வலுவான திரைக்கதை, சிரிக்க வைக்கும் காட்சிகள், சென்டிமெண்ட் சீன்கள், இசைக்கு முக்கியத்துவம் என கலந்துகட்டி இருக்கும். இதுவும் அப்படியான படம் தான்.
தனது அடுத்த படத்திற்கு இளையராஜாவை அணுகினார் ஆர்.சுந்தர்ராஜன். அப்போது இளையராஜா "வெவ்வேறு படங்களுக்கு தயார் செய்த 6 பாட்டு தரேன். அதற்கேற்றவாறு ஒரு கதையை தயார் செய்து கொள்" என்று கூறிவிட்டார். அப்படி பாடலுக்காக உருவான கதை தான் இந்த படம். 'ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு', 'இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ', 'மேகம் கருக்கையிலே', 'அழகு மலராட', 'காத்திருந்து காத்திருந்து...' என அத்தனை பாடல்களும் ஹிட்டானது.
ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த்தை பெர்பார்மன்ஸ் ஹீரோவாக அடையாளம் காட்டியது. வெள்ளச்சாமியாக விஜயகாந்த், காதலி வைதேகி ஆக பரிமளா, விதவை வைதேகி ஆக ரேவதி நடித்தனர். கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளும் பெரிய அளவில் ஹிட்டானது.
1984ம் ஆண்டு தீபாவளியன்று இப்படம் வெளியானது. தீபாவளிப் படங்களில், நல்ல கதையாலும், சிறப்பான நடிப்பாலும், காமெடியாலும் முக்கியமாக இளையராஜாவின் இசையாலும், வெள்ளிவிழா படமானது.