பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

அடிதடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த விஜயகாந்தை எல்லா மக்களுக்குமான நடிகராக மாற்றியது வைதேகி காத்திருந்தாள் படமும், அம்மன் கோவில் கிழக்காலே படமும்தான். இதில் அம்மன் கோவில் கிழக்காலே படத்தின் கதையை ரஜினி நடிப்பதற்காக எழுதினார் ஆர்.சுந்தர்ராஜன். காரணம் அப்போது ரஜினியை இயக்கி விட்டால் இயக்கியவர் முன்னணி இயக்குனராகி விடுவார் என்பதால் அப்படி நினைத்தார்.
ஆனால் கதையை கேட்ட ரஜினி 'நமக்கு மியூசிக் சப்ஜெக்ட் சரிப்பட்டு வராது. ஆக்ஷன் சப்ஜெக்டோடு வாங்க' என்று கூறிவிட்டார். இதனால் அப்போது 'பூ விலங்கு' படத்தில் அறிமுகமான முரளி இளம் ஹீரோவாக வரவேற்பு பெற்று வந்தார். அவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து பெங்களூருவிற்கு சென்று முரளியின் தந்தையை பார்த்து கதை சொன்னார். 'பாலச்சந்தர் படம் என்பதால்தான் 'பூ விலங்கு' படத்தில் என் மகன் நடிக்க சம்மதித்தேன். அவன் கன்னடத்தில் அறிமுகமாகி இருக்க வேண்டும். இப்போது அவன் நடித்துக் கொண்டிருக்கும் கன்னட படம் முடியட்டும் பார்க்கலாம்' என்று கூறிவிட்டார்.
இதனால் மனம் வருந்திய ஆர்.சுந்தர்ராஜன் 'வைதேகி காத்திருந்தாள்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால் விஜயகாந்தையே இந்த படத்திலும் நடிக்க வைக்க முடிவு செய்து அவரையே தேர்வு செய்தார். பலமுறை விஜயகாந்துடன் நடிக்க மறுத்து வந்த ராதா, 'வைதேகி காத்திருந்தாள்' வெற்றியால் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார்.
இளையராஜாவின் பாடல்கள் படத்திற்கு பெரிய உதவி செய்ய 'அம்மன் கோவில் கிழக்காலே' பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகுதான் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் 'ராஜாதி ராஜா' படத்தில் ரஜினி நடித்தார்.