'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

கடந்த பிப்ரவரி 26ம் தேதி உதப்பூரில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டங்கள் பாரம்பரிய சடங்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தெலுங்கானாவில் மஹ்பூப் நகர் மாவட்டத்திலுள்ள அச்சம்பேட்டைக்கு அருகில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் மூதாதையர் கிராமமான தும்மல் பேட்டாவில் உள்ள சத்யநாராயண சுவாமி கோவிலில் மணமக்கள் பூஜை செய்துள்ளார்கள். அவர்களது இந்த வருகையை ஒட்டி கிராமவாசிகள் அவர்களுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.
அதோடு இந்த கிராமத்தில் விஜய் தேவரகொண்ட குடும்பத்தினர் ஒரு புதிய வீட்டை கட்டி உள்ளார்களாம். மேலும், உதய்பூரில் திருமணம் செய்து கொண்டு திரும்பிய பிறகு விஜய் தேவாரகொண்டா, ராஷ்மிகா மந்தனா தம்பதியர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியையும் சந்தித்து தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற மார்ச் நான்காம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.




