Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ்

02 மார், 2026 - 12:21 IST
எழுத்தின் அளவு:
I-thought-about-quitting-cinema-Nivedhithaa-Sathish
Advertisement


ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் தயாரிப்பில், விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ள படம் 'ஓ பட்டர்பிளை'. இப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர். வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். வரும் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதை முன்னிட்டு படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு நிவேதிதா சதீஷ் பேசியதாவது: நான் சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. பத்து படங்களில்தான் நடித்திருக்கிறேன். கதையை தேர்வு செய்து நடிப்பதால்தான் குறைவான படங்களில் நடித்திருக்கிறேன்.

'கேப்டன் மில்லர்' படத்திற்கு பிறகு உடல் ரீதியாக மன ரீதிகாக பின்னடைவை சந்தித்தேன். சினிமாவை விட்டுவிட்டு வேறு ஏதாவது செய்யலாமா என்று யோசித்தேன். ஒரு பெரிய ஆபரேஷன் நடந்து மருத்துவமனையில் இருந்தேன். அப்போதுதான் இந்த படத்தின் வாய்ப்பு வந்தது. நான் அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் இந்த படத்தின் கதையும் எனக்கு பொருத்தமாக இருந்தது. என்றாலும் மருத்துவமனையில் இருந்து திரும்ப 2 மாதங்கள் ஆகும் என்றேன். அதுவரை காத்திருக்கிறோம் என்றார்கள். அவர்கள் தந்த உற்சாகத்தில் 10 நாளில் மருத்துவமனையில் இருந்து திரும்பினேன்.

சினிமாவில் உருவக் கேலி, நிறக்கேலி நிறைய இருந்தாலும் அப்படியான எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள வைக்காமல் என்னை ரொம்பவே கவனித்துக் கொண்ட டீம் இந்த படத்தினுடையது. இந்த படம் எந்த படத்தின் ரெபெரன்சும் அல்ல. இந்த படம் இனி வரப்போகும் படங்களுக்கு ரெபெரன்சாக இருக்கும். ஒவ்வொரும் கடந்து போகும் உணர்வுகளை பேசுகிற படமாக இருக்கும். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆங்கிலோ இந்திய பெண்ணை காதலிக்கும் வடசென்னை பையன்: 'அன்பே டயானா'வின் கதைஆங்கிலோ இந்திய பெண்ணை காதலிக்கும் ... 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap