மஞ்சு வாரியரின் அதிகாலை ஸ்கூட்டி பயணமும் குதிரையேற்ற பயிற்சியும் | தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்ற சில மணி நேரத்தில் நடிகர் விஷால் வைத்த கோரிக்கைகள் | நயன்தாரா எனக்கு அக்கா... ஏன்னா? சென்னையில் ஸ்ரீலீலா சொன்ன விஷயம் | சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் முதல்வர் விஜய் | எங்களுக்கு அழைப்பு வரலை: சினிமா சங்கங்கள் வருத்தம் | நடிகைகளுக்கு சிபாரிசு: எஸ்கேப் ஆகும் உச்ச நடிகர் | பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி | முதல்வராக பொறுப்பேற்ற விஜய்; விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள் | ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் சுரேஷ்கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் 'ஜேஎஸ்கே' அதாவது 'ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா' என்கிற படம் வெளியானது. திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான ஒரு இளம் பெண் அந்த கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என தெரியாத நிலையில் நீதிமன்றத்தின் உதவியை நாடுவது போன்று இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. படத்தில் கதாநாயகியாக நடித்த அனுபமாவின் பெயர் ஜானகி.
ஆனால் படம் சென்சார் சான்றிதழுக்காக அனுப்பப்பட்ட போது படம் பார்த்த அதிகாரிகள் ஜானகி என்கிற பெயரை டைட்டிலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் படத்தில் ஜானகி என வரும் இடங்களில் அந்த வார்த்தையை மியூட் செய்ய வேண்டும் என வாய்மொழியாக உத்தரவிட்டனர். சில வார போராட்டங்களுக்குப் பிறகு இரு தரப்பிலும் ஒரு சமரசம் ஏற்பட்டு ஜானகி என்பதற்கு முன்பாக 'வி' என்கிற எழுத்தை சேர்த்து 'வி ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா' என்கிற பெயரில் அந்த படம் வெளியானது.
இந்த நிலையில் இதேபோன்று தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் உருவாகியுள்ள ஜானகி என்கிற படமும் இதே டைட்டில் சர்ச்சையில் தற்போது சிக்கியுள்ளது. சத்தீஸ்கர் மொழியில் எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது ஹிந்திக்கு மாற்றப்பட்டு சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படம் பார்த்த அதிகாரிகள் முதலில் பல காட்சிகளுக்கு கட் சொல்லிவிட்டு அதன் பிறகு 'யுஏ 16 பிளஸ்' சான்றிதழ் வழங்கலாம் என கூறினார்கள்.
ஆனால் இந்த மாற்றங்களை செய்து வந்தபோது சென்சார் அதிகாரிகள் இந்த படத்தின் டைட்டிலில் இடம்பெறும் ஜான்கி என்கிற வார்த்தை ராமாயண நாயகி சீதாவை குறிப்பதாகவும் அதேபோல படத்தின் நாயகனாக ரகுராம் என்கிற பெயர் இருப்பதால் அது ராமனை குறிப்பதாகவும் கூறி இந்த இரண்டு பெயர்களையும் மாற்றும்படி கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து படக்குழுவினர் தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகி நீதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து விசாரித்த நீதிமன்றம் இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி சென்சார் போர்டுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.




