என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

லட்சுமி காந்தன் கொலை வழக்கில் 30 மாத சிறைவாசத்திற்குப் பிறகு, என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து, இயக்கிய படம் 'மணமகள்'. பிரபல மலையாள நாடக ஆசிரியர் முன்ஷி பரமு பிள்ளையின் பிரபலமான மலையாள நாடகமான 'சுப்ரபா'வை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் படம் தயாரானது. மு. கருணாநிதி வசனம் எழுதினார். என்.எஸ்.கே ஒரு சமூக சீர்திருத்தவாதியின் பாத்திரத்தில் நடித்தார். அவருடன் பத்மினி, லலிதா, எஸ்.வி.சஹஸ்ரநாமம், டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் மற்றும் டி.எஸ்.துரைராஜ் ஆகியோரும் நடித்தனர்.
பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இல்லாமல் கட்டாயம் திருமணம் செய்து வைப்பது தொடர்பான கதை. அந்த காலத்தில் படத்தில் பணியாற்றும் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் வெளியில் தெரிய மாட்டார்கள். ஆனால் இந்த படத்தின் டைட்டிலின் போது தொழில்நுட்ப கலைஞர்களை திரையில் காட்டினார். அந்த வகையில் வசனம் எழுதிய கருணாநிதியும் திரையில் தோன்றினார்.
எஸ்எஸ் ராஜேந்திரன் இந்த படத்தில் தான் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார். இதில் அவர் பிச்சைக்காரனாக நடித்தார். புரட்சிகரமான வசனங்களை பேசினார். அவர் காட்சிகளும் அவர் பேசிய வசனங்களும் அமைதிக்கு பங்கும் விளைவிக்கலாம் என்று கூறி தணிக்கை குழு நீக்கிவிட்டது. என்றாலும் டைட்டில் கார்டில் எஸ்எஸ் ராஜேந்திரன் பெயர் இடம் பெற்றது. பின்னர் அவர் 'பராசக்தி' படத்தில் நடித்து புகழ் பெற்றார்.