300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
பாலிவுட்டில் முன்னணி கான் நடிகர்களில் ஒருவர் அமீர்கான். மற்ற இருவரை போல ஆக்ஷன் கமர்சியல் படங்கள் பக்கம் போகாமல் தொடர்ந்து கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் வெளியாகி உள்ளது. இது குறித்து புரமோஷன் நிகழ்ச்சிகளில கலந்து கொண்டார் அமீர்கான். அந்த வகையில் சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கலந்துரையாடினார் அமீர்கான். அப்போது அவர் மனம் திறந்து பல விஷயங்களை கூறினார்.
இது குறித்து அவர் பேசும்போது, “என் முதல் மனைவி ரீனா தத்தா என்னை விட்டு பிரிவதாக கூறி வெளியேறிய அன்று ஒரு பாட்டில் மது அருந்தினேன். அதன்பிறகு வந்த ஒன்றரை வருடங்களில் தினசரி குடித்தேன். என்னால் தூங்கவே முடியவில்லை. அதிக மது குடித்ததால் சுயநினைவை இழந்தேன். என்னை நானே உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்தேன்” என்றும் மனம் திறந்து கூறியுள்ளார்.
அவரது முதல் மனைவி ரீனா தத்தாவுடனான வாழ்க்கை பதினாறு வருடங்களுக்கு பிறகு விவாகரத்தில் முடிந்தது. அதைத் தொடர்ந்து 2005ல் கிரண் ராவ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் அமீர்கான். அவரையும் கிட்டத்தட்ட 16 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2021ல் விவாகரத்து செய்தார் அமீர்கான். தற்போது தனது நீண்டநாள் தோழியான கவுரி ஷிண்டேவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார் அமீர்கான்.. ஆனாலும் தனது முதல் இரண்டு மனைவிகளுடனும் இணக்கமான உறவை பேணி வருகிறார் அமீர்கான்.