ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
சில நாட்களுக்கு முன்பு மலையாள திரையுலகம் குறித்து வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் தாங்கள் இந்த துறையில் ஆண்களிடம் சந்தித்த கசப்பான பாலியல் அனுபவங்கள் குறித்து கூறி வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் திரையுலகில் தனது அனுபவம் எப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார். தமிழில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, இறுகப்பற்று உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
இது குறித்து சமீபத்தில் அவர் கூறும்போது, “சினிமாவில் இது போன்ற கசப்பான அனுபவங்கள் எதையும் நான் சந்தித்ததில்லை. அதே சமயம் மற்றவர்கள் சந்திக்கவில்லை என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் சினிமாவை தாண்டி வெளியே குறிப்பாக நான் ஏதாவது நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு செல்லும்போது அதன் டிரைவர் என்னை எந்தவிதமாக பார்க்கிறார் என்பதிலேயே எனது எண்ண ஓட்டம் தொடர்ந்து இருக்கும். என்னால் பல சமயங்களில் இயல்பாக அமர்ந்து பயணிக்க முடிந்ததில்லை” என்று கூறியுள்ளார். மேலும், ‛‛சினிமாவில் மேக்கப் பணி செய்யும் பெண்கள் சேலைகளை அணிவிக்கும் பெண்கள் ஆகியோருக்கு கழிவறை வசதிகள் கூட சுத்தமாக இல்லை, இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும்'' என்றும் கூறியுள்ளார்.