ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! |

சில நாட்களுக்கு முன்பு மலையாள திரையுலகம் குறித்து வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் தாங்கள் இந்த துறையில் ஆண்களிடம் சந்தித்த கசப்பான பாலியல் அனுபவங்கள் குறித்து கூறி வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் திரையுலகில் தனது அனுபவம் எப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார். தமிழில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, இறுகப்பற்று உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
இது குறித்து சமீபத்தில் அவர் கூறும்போது, “சினிமாவில் இது போன்ற கசப்பான அனுபவங்கள் எதையும் நான் சந்தித்ததில்லை. அதே சமயம் மற்றவர்கள் சந்திக்கவில்லை என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் சினிமாவை தாண்டி வெளியே குறிப்பாக நான் ஏதாவது நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு செல்லும்போது அதன் டிரைவர் என்னை எந்தவிதமாக பார்க்கிறார் என்பதிலேயே எனது எண்ண ஓட்டம் தொடர்ந்து இருக்கும். என்னால் பல சமயங்களில் இயல்பாக அமர்ந்து பயணிக்க முடிந்ததில்லை” என்று கூறியுள்ளார். மேலும், ‛‛சினிமாவில் மேக்கப் பணி செய்யும் பெண்கள் சேலைகளை அணிவிக்கும் பெண்கள் ஆகியோருக்கு கழிவறை வசதிகள் கூட சுத்தமாக இல்லை, இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும்'' என்றும் கூறியுள்ளார்.