மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள், பிரம்மாண்டப் படங்கள் வெளியாகும் போது அந்தப் படங்களுக்கு ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை டிக்கெட் கட்டணங்களை தியேட்டர்களில் உயர்த்திக் கொள்ள அரசு அனுமதி அளிக்கிறது.
மற்ற நாட்களில் உள்ள வழக்கமான கட்டணங்களை விடவும் சிங்கிள் தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் ஆகியவற்றிற்கு கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அரசு ஆணை பிறப்பிக்கிறது. ஒவ்வொரு முறை புதிய படங்கள் வெளியாகும் போது தயாரிப்பாளர்கள் அதற்கு மனு அளிப்பதும், அரசு அதை பரிசீலித்து உயர்த்திக் கொள்ள ஆணை பிறப்பிப்பதும் வழக்கமாக இருக்கிறது.
டிக்கெட் கட்டணங்கள் உயர்வதால் புதிய படங்களைப் பார்க்க ரசிகர்கள் தயங்குகிறார்கள் என்ற ஒரு கருத்தும் எழுந்துள்ளது. சில படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் அதிகக் கட்டணம் என்றாலும் வருகிறார்கள், மற்ற படங்களுக்கு வருவதில்லை என்கிறார்கள்.
எனவே, நிரந்தரமாக இதில் ஒரு மாற்றம் செய்ய ஆந்திர மாநில அரசு முடிவெடுத்துள்ளதாம். இது குறித்து ஆந்திர மாநில சினிமாட்டோகிராபி அமைச்சர் கண்டுலா துர்கேஷ் இன்று திரைப்படப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். தயாரிப்பாளர்களும், தியேட்டர்களுக்குப் படம் பார்க்க வரும் ரசிகர்களும் பாதிக்கப்படாத வகையில் கட்டணத்தில் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.