படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
பிரபு நடிக்கும் படங்கள் எப்போதுமே ஒரு கட்டுக்கோப்புடன் இருக்கும். வன்முறை, ஆபாசம் அதிகமான படங்களில் அவர் நடிப்பதில்லை. அப்படி இருந்தும் அவரது சில படங்கள் தணிக்கையில் சிக்கியது. அவற்றில் ஒன்று 'அடுத்தாத்து ஆல்பர்ட்'.
இந்த படத்தின் கதை சுவாரஸ்மானது. பிரபு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், ஊர்வசி பிரமாண சமூகத்தை சேர்ந்தவர். இருவருமே பக்கத்து வீட்டுக்காரர்கள். அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும் அடிமனதில் இருவரும் காதலிப்பார்கள். பிரபுவின் தம்பியும், ஊர்வசியின் தங்கையும் காதலிப்பார்கள். இவர்களின் காதலை சேர்த்து வைக்க இருவரையும் தற்கொலை செய்தது போல நடிக்கச் சொல்வார்கள். இந்த திட்டம் நிறைவேறுவதற்கு முன்பே இருவரும் நிஜமாகவே தற்கொலை செய்து கொள்வார்கள். அதன்பின் பிரபுவும், ஊர்வசியும் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை.
படத்தில் மதம் குறித்து கடினமான விமர்சன வசனங்கள் இருந்தது. இதனால் அந்த வசனங்களை நீக்கினால்தான் சான்றிதழ் தர முடியும் என்று தணிக்கை வாரியம் கூறியது. அதன்பிறகு நடந்த பேச்சு வார்த்தையில் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் தணிக்கை குழுவிற்கு விளக்கம் அளித்தார். அதன்பிறகு கதையோட்டம் பாதிக்காத வசனங்கள் நீக்கப்பட்டு படம் வெளியானது. இந்த படத்தின் தகவல் வெளியில் பரவ, இயக்குனர் ரங்கராஜனுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறுவார்கள்.
இதனால் படத்தின் ரிலீஸ் போஸ்டரில் 'ஆர்ப்பாட்டகாரர்களின் அட்டகாசத்தை முறியடித்து, குண்டு வீசுவோரின் கோமாளித்தனத்தை தகர்த்தெறிந்து, சென்சார் போர்டின் நீதியான தீர்ப்பை சுமந்து வீரபவனி வருகிறார் ஆல்பர்ட்' என்ற வாசகம் இடம் பெற்றது.