50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
தெலுங்கு நடிகர் ராம்சரண், உபாசனா தம்பதிக்கு திருமணமாகி கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து கிலின் காரா என்கிற பெண் குழந்தை பிறந்தது. இதனால் தங்கள் குழந்தை மீது மிகுந்த பாசம் செலுத்தி வரும் தம்பதியினர் குழந்தையின் புகைப்படங்கள் மற்றும் அதன் விளையாட்டுகள் குறித்த வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ராம்சரண் பேசும்போது விலங்குகள் மீதான தனது பாசம் குறித்து பேசினார்
அவர் பேசும்போது, “எனக்கு விலங்குகள் மீது குறிப்பாக குதிரைகள் மீது அதிக பிரியம் உள்ளது. என்னுடைய பண்ணையில் 15 குதிரைகள் இருக்கின்றன. மகதீரா படத்தில் நடித்தபோது அதில் என் உயிரை காப்பாற்றும் காட்சியில் நடித்த பாஷா என்ற குதிரை சமீபத்தில் ஒரு குட்டியை ஈன்றது. அந்த குட்டியை எனது மகளுக்கு நான் பரிசாக அளித்தேன். அதில் அவர் அழகாக ஒரு சவாரியும் செய்துவிட்டார்” என பெருமிதத்துடன் கூறியுள்ளார் ராம்சரண்.