கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படம் குறித்தும் படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் குறித்தும் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் படம் மிகப்பெரிய அளவில் வசூலித்தது. இந்த நிலையில் பிரபல ஹிந்தி நடிகரும், முன்னா பாய் எம்பிபிஎஸ் படத்தில் சஞ்சய் தத்தின் வலது கரமாக நடித்திருந்தவருமான அர்ஷத் வர்சி என்பவர் கல்கி படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் பார்ப்பதற்கு ஜோக்கர் போல இருந்தது என்று கிண்டலாக விமர்சித்து இருந்தார்.
இதற்கு ரசிகர்களும் திரை உலகை சேர்ந்தவர்களும் தனித்தனியாக இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான விஷ்ணு மஞ்சு இதுகுறித்து ஹிந்தி திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “நடிகர் அர்ஷத் வர்சி இப்படி பிரபலமான ஒருவரை குறித்து மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சோசியல் மீடியாவில் சில வார்த்தைகள் உறவுக்கு பாலம் கட்டும். சில வார்த்தைகள் பகையை உருவாக்கி விடும். நாம் எல்லோரும் ஒரு குடும்பம் அதனால் பேசும்போது வார்த்தைகளை சரியாக பயன்படுத்தும்படி அர்ஷத் வர்சிக்கு அறிவுரை கூறுங்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.