சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை | 'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்' | தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனை படைத்த ஏஆர் ரஹ்மானின் 'பெத்தி' | முந்தைய சாதனையை முறியடிக்குமா விஜய் - அனிருத் கூட்டணி? | இரண்டு கைகளிலும் கடிகாரம் அணிவது ஏன் ? ; அபிஷேக் பச்சனின் அடடே விளக்கம் | ‛ப்ரோ கோட்' டைட்டில் விவகாரம் ; ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு | நவம்பர் இறுதியில் ரீ ரிலீஸ் ஆகும் மகேஷ்பாபுவின் பிசினஸ்மேன் | போலியான சோசியல் மீடியா கணக்குகள் ; சரத்குமார் பட நடிகை எச்சரிக்கை |

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படம் குறித்தும் படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் குறித்தும் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் படம் மிகப்பெரிய அளவில் வசூலித்தது. இந்த நிலையில் பிரபல ஹிந்தி நடிகரும், முன்னா பாய் எம்பிபிஎஸ் படத்தில் சஞ்சய் தத்தின் வலது கரமாக நடித்திருந்தவருமான அர்ஷத் வர்சி என்பவர் கல்கி படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் பார்ப்பதற்கு ஜோக்கர் போல இருந்தது என்று கிண்டலாக விமர்சித்து இருந்தார்.
இதற்கு ரசிகர்களும் திரை உலகை சேர்ந்தவர்களும் தனித்தனியாக இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான விஷ்ணு மஞ்சு இதுகுறித்து ஹிந்தி திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “நடிகர் அர்ஷத் வர்சி இப்படி பிரபலமான ஒருவரை குறித்து மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சோசியல் மீடியாவில் சில வார்த்தைகள் உறவுக்கு பாலம் கட்டும். சில வார்த்தைகள் பகையை உருவாக்கி விடும். நாம் எல்லோரும் ஒரு குடும்பம் அதனால் பேசும்போது வார்த்தைகளை சரியாக பயன்படுத்தும்படி அர்ஷத் வர்சிக்கு அறிவுரை கூறுங்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.