37 வருட கிடப்பிற்குப் பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் ஹிந்திப் படம் | ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் |

சில மாதங்களுக்கு முன்பு கன்னட நடிகை ரன்யா ராவ் என்பவர் தொடர்ந்து துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலமாக அடிக்கடி தங்கம் கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த வாகா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். அது மட்டுமல்ல கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ் என்பவரின் வளர்ப்பு மகளும் கூட. அந்த துணிச்சலில் தான் இவர் இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிய வந்தது.. பலமுறை ஜாமினுக்கு விண்ணப்பித்தும் அவை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார் ரன்யா ராவ்.
இந்த நிலையில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம், நடிகை ரன்யா ராவ் தொடர்ந்து துபாயில் இருந்து சுமார் 127.3 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளார் என்று குறிப்பிட்டு அதற்காக அவருக்கு 102.55 கோடி அபராத தொகையாக விதித்துள்ளது. அபராத தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட தவறினால் ரன்யா ராவுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல இந்த தங்க கடத்தலில் ரன்யா ராவின் கூட்டாளிகளாக இணைந்து செயல்பட்ட குண்டூர் ராஜுவுக்கு 67.6 கிலோ தங்கம் கடத்தியதற்காக 62 கோடி அபராத தொகையும் சஹில் ஜெயின் என்பவருக்கு 63.61 கிலோ தங்கம் கடத்தியதற்காக 53 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.




