நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

'தலைவி' படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் அடுத்து மாதவன், கங்கனா ரணாவத் இருவரையும் முதன்மை கதாபாத்திரமாக வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே ஹிந்தியில் மாதவனும், கங்கனாவும் இணைந்து தனு வெட்ஸ் மனு படத்தில் நடித்துள்ளனர். இரண்டாவது முறையாக இந்த படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாக்கியுள்ளனர். இப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ' சர்க்கிள்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளனர். இதனால் இந்த படத்தை இவ்வருட டிசம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.