சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

பெரும்பாலும் நடிகைகள் நடிப்பதுடன் ஒரு சிலர் கூடுதலாக போனால் பாடுவது என்பதோடு மட்டும் தங்களது பணிகளை நிறுத்திக் கொள்வார்கள். இந்த நிலையில் சமீபகாலமாக மலையாளத்தில் நடிகைகள் சிலர் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கத்திலும் தங்களது பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த நூரின் ஷெரீப் என்பவர் தற்போது நடிகர் திலீப் நடித்து வரும் பா பா பா என்கிற படத்திற்கு கதை எழுதி உள்ளார். அதை தொடர்ந்து அடுத்ததாக தற்போது சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லோகா சாப்டர் 1 ; சந்திரா படத்தின் வெற்றிக்கு தனது திரைக்கதை அமைப்பால் உறுதுணையாக நின்று இருக்கிறார் நடிகை சாந்தி பாலச்சந்திரன்.
இவர் இந்த படத்தின் மூலம் தான் திரைக்கதை ஆசிரியராக மாறியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2017ல் நடிகர் தனுஷ் மலையாளத்தில் தயாரித்த தரங்கம் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சாந்தி பாலச்சந்திரன். அந்த படத்தின் இயக்குனர் டொமினிக் அருண் தான் தற்போது இந்த லோகா சாப்டர் 1 ; சந்திரா படத்தை இயக்கியுள்ளார். அதனால் சாந்தி பாலச்சந்திரனின் கதை உருவாக்கும் திறமையை அறிந்து கொண்டு அவரை இந்த படத்தில் திரைக்கதை எழுத உற்சாகப்படுத்தினாராம். தற்போது படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சாந்தி பாலச்சந்திரன்.