சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

தெலுங்கில் 'சுபம்' என்ற படத்தை தயாரித்து நடித்த சமந்தா, அடுத்தபடியாக நந்தினி ரெட்டி இயக்கத்தில் 'மா இண்டி பங்காரம்' என்ற படத்தை தயாரித்து நடிக்கப் போகிறார். இந்த நிலையில் தற்போது துபாய் நாட்டிற்கு சென்றுள்ள சமந்தா, அங்கு நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதோடு ஒரு ஆணின் கையையும் அவர் பிடித்துக் கொண்டிருக்கிறார். என்றாலும் அந்த ஆணின் முகம் தெரியவில்லை. இப்படி ஒரு வீடியோவை சமந்தா வெளியிட்டதை அடுத்து அந்த ஆண் தற்போது சமந்தா காதலித்து வரும் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே இயக்குனர் ராஜ் நிடிமொரு கையை பிடித்துக் கொண்டு சமந்தா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதோடு ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டு நிகழ்ச்சியின்போதும் இருவரும் கைகோர்த்தபடி நடந்தார்கள். இந்த நிலையில் தான், ஒருவரின் கையை தான் பற்றிக்கொண்டிருக்கும் வீடியோவை சமந்தா வெளியிட்டிருப்பதை அடுத்து அந்த நபரும் இயக்குனர் ராஜ் நிடிமொருதான் என்று ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.