'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

தெலுங்கில் 'சுபம்' என்ற படத்தை தயாரித்து நடித்த சமந்தா, அடுத்தபடியாக நந்தினி ரெட்டி இயக்கத்தில் 'மா இண்டி பங்காரம்' என்ற படத்தை தயாரித்து நடிக்கப் போகிறார். இந்த நிலையில் தற்போது துபாய் நாட்டிற்கு சென்றுள்ள சமந்தா, அங்கு நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதோடு ஒரு ஆணின் கையையும் அவர் பிடித்துக் கொண்டிருக்கிறார். என்றாலும் அந்த ஆணின் முகம் தெரியவில்லை. இப்படி ஒரு வீடியோவை சமந்தா வெளியிட்டதை அடுத்து அந்த ஆண் தற்போது சமந்தா காதலித்து வரும் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே இயக்குனர் ராஜ் நிடிமொரு கையை பிடித்துக் கொண்டு சமந்தா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதோடு ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டு நிகழ்ச்சியின்போதும் இருவரும் கைகோர்த்தபடி நடந்தார்கள். இந்த நிலையில் தான், ஒருவரின் கையை தான் பற்றிக்கொண்டிருக்கும் வீடியோவை சமந்தா வெளியிட்டிருப்பதை அடுத்து அந்த நபரும் இயக்குனர் ராஜ் நிடிமொருதான் என்று ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.




