தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தெலுங்கில் 'சுபம்' என்ற படத்தை தயாரித்து நடித்த சமந்தா, அடுத்தபடியாக நந்தினி ரெட்டி இயக்கத்தில் 'மா இண்டி பங்காரம்' என்ற படத்தை தயாரித்து நடிக்கப் போகிறார். இந்த நிலையில் தற்போது துபாய் நாட்டிற்கு சென்றுள்ள சமந்தா, அங்கு நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதோடு ஒரு ஆணின் கையையும் அவர் பிடித்துக் கொண்டிருக்கிறார். என்றாலும் அந்த ஆணின் முகம் தெரியவில்லை. இப்படி ஒரு வீடியோவை சமந்தா வெளியிட்டதை அடுத்து அந்த ஆண் தற்போது சமந்தா காதலித்து வரும் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே இயக்குனர் ராஜ் நிடிமொரு கையை பிடித்துக் கொண்டு சமந்தா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதோடு ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டு நிகழ்ச்சியின்போதும் இருவரும் கைகோர்த்தபடி நடந்தார்கள். இந்த நிலையில் தான், ஒருவரின் கையை தான் பற்றிக்கொண்டிருக்கும் வீடியோவை சமந்தா வெளியிட்டிருப்பதை அடுத்து அந்த நபரும் இயக்குனர் ராஜ் நிடிமொருதான் என்று ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.




