'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

திடீரென அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், துபாய், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது, இதனால் இந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான விமான போக்குவரத்து தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது, இந்த சமயத்தில் துபாய் சென்றிருந்த பாலிவுட் நடிகை சோனல் சவுகான் என்பவர் அங்கே இந்த இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டுள்ளார். இவர் தமிழ் தெலுங்கில் உருவான 'இஞ்சி இடுப்பழகி', பாலகிருஷ்ணா நடித்த 'லெஜன்ட், ரூலர்', பிரபாஸின் 'ஆதிபுரூஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தனது நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாக எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை பதிவு ஒன்றை வைத்துள்ள சோனல் சவுகான், “மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே.. நான் துபாயில் தற்போதுள்ள சூழலில் சிக்கி தவிக்கிறேன். இந்தியாவுக்கு திரும்பும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் பத்திரமாக ஊர் திரும்புவதற்கான இந்திய அரசின் வழிகாட்டுதலையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். நான் பாதுகாப்பாக ஊர் திரும்பும் விதமாக எனக்கு உதவி கிடைத்தால் நன்றி உடையவளாக இருப்பேன்” என்று கூறியுள்ளார் சோனல் சவுகான்.