காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

தமிழில் வில்லனாக நடித்து வந்த நம்பியார், தெலுங்கிலும் நடித்தார். அவர் தெலுங்கில் நடித்த படங்களில் முக்கியமான படம் 'கண்ணா தல்லி'. இந்த படம் தமிழில் 'பெற்றதாய்' என்ற பெயரில் வெளியானது. கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கினார்.
கடன் தொல்லையால் கைவிட்டுப்போன கணவன், ஊதாரித்தனமான மகன் இந்த இருவரையும் சமாளித்து ஒரு தாய் தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இதில் தாயாக ஜி.வரலட்சுமி நடித்தார். அவரது நல்ல மகனாக அக்னினேனி நாகேஸ்வரராவ் நடித்தார். கெட்ட மகனாக நம்பியார் நடித்தார்.
இந்த படத்தின் மூலம்தான் பி.சுசீலா பாடகியாக அறிமுகமானார். 'எதுக்கு அழைத்தாய் எதுக்கு' என்ற முதல் தமிழ் பாடலையும், 'ஏண்டக்கு பிச்சாவலு' என்ற தெலுங்கு பாடலையும் தனது முதல் பாடலாக பி.சுசீலா பாடினார். இந்த படம் தெலுங்கில் பெரிய வரவேற்பையும், தமிழில் சுமாரான வரவேற்பையும் பெற்றது.




