பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

ஆரம்பகாலத்தில் திமுகவின் பிரசார பீரங்கிகளில் ஒருவராக இருந்தவர் காளிமுத்து. எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது திமுக.,வில் இருந்து பிரிந்து அவருடன் சென்றார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.
ஆனால் அவர் திரைப்படத்திற்கு பாடல் எழுதியது அதிகம் கவனிக்கப்படாத ஒன்று. காளிமுத்துவின் நெருங்கிய நண்பராக இருந்த இயக்குனர் மகேந்திரன் தான் இயக்கிய 'கண்ணுக்கு மை எழுது' என்ற படத்தில் அவரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.
இந்த படத்தில் அன்புமலர்களின், தாம்பாள சுந்தரியே, வாடா மல்லியே, சோகங்கள் என்ற பாடல்களை அவர் எழுதினார். இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாது.
பாட்டி, மகள், பேத்தியின் உறவை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் பானுமதி, சுஜாதா, வடிவுக்கரசி இவர்களுடன் சரத்பாபு நடித்திருந்தார். 1986ம் ஆண்டு வெளிவந்தது.




