என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

ஆரம்பகாலத்தில் திமுகவின் பிரசார பீரங்கிகளில் ஒருவராக இருந்தவர் காளிமுத்து. எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது திமுக.,வில் இருந்து பிரிந்து அவருடன் சென்றார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.
ஆனால் அவர் திரைப்படத்திற்கு பாடல் எழுதியது அதிகம் கவனிக்கப்படாத ஒன்று. காளிமுத்துவின் நெருங்கிய நண்பராக இருந்த இயக்குனர் மகேந்திரன் தான் இயக்கிய 'கண்ணுக்கு மை எழுது' என்ற படத்தில் அவரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.
இந்த படத்தில் அன்புமலர்களின், தாம்பாள சுந்தரியே, வாடா மல்லியே, சோகங்கள் என்ற பாடல்களை அவர் எழுதினார். இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாது.
பாட்டி, மகள், பேத்தியின் உறவை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் பானுமதி, சுஜாதா, வடிவுக்கரசி இவர்களுடன் சரத்பாபு நடித்திருந்தார். 1986ம் ஆண்டு வெளிவந்தது.