பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'தக்லைப்' படத்தை அடுத்து ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பு அறிவு என்ற இரட்டையர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் கமல்ஹாசன். அவரது 237வது படமான இப்படம் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகிறது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட போதும், 'தக்லைப்' படத்தின் தோல்வி காரணமாக ஸ்கிரிப்டில் சில மாற்றங்களை செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கமல் 237வது படத்தில் மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே தமிழில், சிவகார்த்திகேயனுடன் ஹீரோ என்ற படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன், தற்போது ரவி மோகனுடன் 'ஜீனி' என்ற படத்தில் நடித்துள்ளார்.