நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
நடிகர் பிரித்விராஜ் இரண்டு ஆண்டுகளாகவே ஒரு பக்கம் மோகன்லாலின் ‛எல் 2 : எம்புரான்' படத்தை இயக்குவதிலும், இன்னொரு பக்கம் தெலுங்கில் ‛சலார்', ஹிந்தியில் ‛படே மியான் சோட்டே மியான்' ஆகிய படங்களில் வில்லனாகவும், மாறி மாறி பணியாற்றி வந்தார். அதுமட்டுமல்ல ‛சர்ஜமீன்' என்கிற ஹிந்தி வெப்சீரிசிலும் நடித்துள்ளார். ஜூலை 25 முதல் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. அடுத்ததாக தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தற்போது வில்லனாக நடித்தும் வருகிறார் பிரித்விராஜ்.
இன்னொரு பக்கம் மலையாளத்தில் உருவாக இருக்கும் கலிபா என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பிரித்விராஜ். இந்த படத்தை புலி முருகன் இயக்குனர் வைசாக் இயக்குகிறார். கடந்த 2010ல் வெளியான போக்கிரி ராஜா என்கிற படத்தில் பிரித்விராஜை இயக்கியதன் மூலம் தான் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமானார் வைசாக். அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்குகிறார். படத்தின் துவக்க விழா பூஜை தற்போது நடைபெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் லண்டனில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.