சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் |

நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் பிஸியான பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார். தற்போது தெலுங்கில் 'தி கேர்ள் பிரண்ட்' என்கிற படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் மற்றும் பாடகி சின்மயி-ன் கணவருமான ராகுல் ரவீந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ராஷ்மிகாவிற்கு ஜோடியாக தீக்ஷித் ஷெட்டி நடிக்கிறார். கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் என இரு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இன்னும் இறுதிக்கட்ட பணிகளில் உள்ள இப்படத்தை இவ்வருட செப்டம்பர் 5ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
க்ரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள 'காட்டி' படத்தையும் செப்டம்பர் 5ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் அனுஷ்கா, ராஷ்மிகா படங்கள் ஒரே தேதியில் நேருக்கு நேர் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.