மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகர்ஜூனா, தனது 100வது படத்தை எட்டி உள்ளார். இந்த படத்தை தமிழில் ‛நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய ரா.கார்த்திக் இயக்குகிறார். கடந்த வாரம் இந்த படத்தை பூஜை நிகழ்வுடன் துவங்கியுள்ளனர். இதை அன்னபூர்ணா ஸ்டுடியோ தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார்.
குடும்ப கதைக்களத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் இடம் பெறுகின்றனராம். முதல் நாயகியாக தபு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியானது. தொடர்ந்து இப்போது மற்றொரு நாயகியாக அனுஷ்கா ஷெட்டி நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நாகர்ஜூனா, அனுஷ்கா இருவரும் சூப்பர், டான், ரகடா, டமாருக்கா போன்ற படங்களில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர சில படங்களில் சிறப்பு ரோலில் நாகார்ஜூனாவின் படத்தில் அனுஷ்கா நடித்துள்ளார்.




