நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுக்கு இந்த வருடம் குபேரா, கூலி என இரண்டு படங்கள் வெளியாகி வெற்றி படங்களாக அமைந்தன. ஆனால் இந்த இரண்டு படங்களிலும் அவர் வில்லனாக மற்றும் முக்கிய கதாபாத்திரமாக தான் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் அவரது நூறாவது படம் தற்போது துவங்கி உள்ளது. இந்த படத்தை தமிழில் நித்தம் ஒரு வானம் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ரா கார்த்திக் இயக்குகிறார்.
இதில் பாலிவுட் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 90களில் தெலுங்கில் நாகார்ஜூனா, தபு ஜோடி ரசிகர்களிடம் ரொம்பவே வரவேற்பை பெற்ற ஜோடி. குறிப்பாக இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் நன்றாக ஒர்க் அவுட் ஆகியது. அந்த வகையில் கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு பிறகு நாகார்ஜூனாவின் இந்த நூறாவது படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்கிற செய்தி தற்போது தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.




