ஜெயிலர் வெளியான அதே ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் ஜெயிலர் 2 | சூர்யாவின் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகிறதா? | துரந்தர் 2வை உடனே வெளியிடுங்கள் : ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் | களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி | ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண் | சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல் | எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி | செத்து, பிழைத்தேன்: செல்வராகவன் உருக்கம் | 3 மணி நேரத்திற்கு மேல் ஓடப் போகும் 'ஜனநாயகன்' ? |

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுக்கு இந்த வருடம் குபேரா, கூலி என இரண்டு படங்கள் வெளியாகி வெற்றி படங்களாக அமைந்தன. ஆனால் இந்த இரண்டு படங்களிலும் அவர் வில்லனாக மற்றும் முக்கிய கதாபாத்திரமாக தான் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் அவரது நூறாவது படம் தற்போது துவங்கி உள்ளது. இந்த படத்தை தமிழில் நித்தம் ஒரு வானம் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ரா கார்த்திக் இயக்குகிறார்.
இதில் பாலிவுட் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 90களில் தெலுங்கில் நாகார்ஜூனா, தபு ஜோடி ரசிகர்களிடம் ரொம்பவே வரவேற்பை பெற்ற ஜோடி. குறிப்பாக இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் நன்றாக ஒர்க் அவுட் ஆகியது. அந்த வகையில் கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு பிறகு நாகார்ஜூனாவின் இந்த நூறாவது படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்கிற செய்தி தற்போது தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.




