ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனா அவரது திரையுலக பயணத்தில் தற்போது நூறாவது படத்தை தொட்டுள்ளார். தற்காலிகமாக 'கிங் 100' என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் 'நித்தம் ஒரு வானம்' என்கிற படத்தை இயக்கிய ரா கார்த்திக் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நாகார்ஜுனாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கும் நடிகை தபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதை உறுதிப்படுத்தியுள்ளார் நாகார்ஜுனா.
தெலுங்கில் நடிகை தபு நடித்ததே பத்துக்கும் குறைவான படங்களில் தான். இதில் நாகார்ஜுனாவும் தபுவும் இணைந்து இரண்டு படங்களில் நடித்துள்ளார்கள். அதேசமயம் கிட்டத்தட்ட 28 வருடங்களாக இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் இவர்களுக்குள் உள்ள நட்பு இப்போதும் கொஞ்சம் கூட குறையவில்லை.
இந்த நிலையில் தான் நாகார்ஜுனா தனது நூறாவது படத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவலை கேள்விப்பட்ட தபு இந்த படத்தில் நானும் இடம் பெற வேண்டும் என தனக்கு அன்பு கட்டளை போட்டு விட்டதாகவும் அதை தன்னால் மீற முடியவில்லை. அவரும் இந்த படத்தில் இருக்கிறார் என்றும் நாகார்ஜுனா உறுதி செய்துள்ளார்.