நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான பவன் கல்யாண், ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வர் ஆனார். அதன் பின்னர் பெரிதளவில் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இருப்பினும் அவர் ஏற்கனவே நடித்து வந்த ‛ஹரிஹர வீர மல்லு, ஓஜி' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'ஓ.ஜி' படம் வெற்றி பெற்றது.
தற்போது ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண் அடுத்தும் படங்களில் நடிப்பதற்கு கதை கேட்டு வருகிறாராம். கன்னட சினிமாவை சேர்ந்த கே.வி.என் புரொடக் ஷன்ஸ் நிறுவனம் பவன் கல்யாண் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளனர். இந்த படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் மற்றும் வினோத் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.