நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் வரை சென்று சாதனை புரிந்தவர். ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற சர்வதேச விருதுகளையும் வென்றவர். தொழில்நுட்பம் மாற மாற தனது இசையிலும் பல புதுமைகளை செய்து வருகிறார். அந்தவகையில் இப்போது டிரெண்ட்டாகவும் எதிர்கால தொழில்நுட்பமாக பார்க்கப்படும் ஏஐ தொழில்நுட்பத்திலும் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் கிளவுட் உடன் இணைந்து ஏஐ தொழில்நுட்பத்தில் இசைக்குழுவை அமைக்கிறார் ரஹ்மான். இதற்கு ‛சீக்ரெட் மவுண்ட்டேன்' என பெயரிட்டுள்ளார். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதை சொல்லும் பாணியில் இந்த இசை ஆல்பம் இருக்குமாம். வியோ 3, இமேஜென், ஜெமினி பிளாஷ், ஜெமினி 2.5 ப்ரோ ஆகியவற்றை இந்த திட்டத்தில் பயன்படுத்த இருக்கின்றனர்.
‛‛இது கலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட மனிதர்களின் முழுமையான கொண்டாட்டமாக இருக்கும்'' என்கிறார் ரஹ்மான்.