மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் வரை சென்று சாதனை புரிந்தவர். ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற சர்வதேச விருதுகளையும் வென்றவர். தொழில்நுட்பம் மாற மாற தனது இசையிலும் பல புதுமைகளை செய்து வருகிறார். அந்தவகையில் இப்போது டிரெண்ட்டாகவும் எதிர்கால தொழில்நுட்பமாக பார்க்கப்படும் ஏஐ தொழில்நுட்பத்திலும் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் கிளவுட் உடன் இணைந்து ஏஐ தொழில்நுட்பத்தில் இசைக்குழுவை அமைக்கிறார் ரஹ்மான். இதற்கு ‛சீக்ரெட் மவுண்ட்டேன்' என பெயரிட்டுள்ளார். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதை சொல்லும் பாணியில் இந்த இசை ஆல்பம் இருக்குமாம். வியோ 3, இமேஜென், ஜெமினி பிளாஷ், ஜெமினி 2.5 ப்ரோ ஆகியவற்றை இந்த திட்டத்தில் பயன்படுத்த இருக்கின்றனர்.
‛‛இது கலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட மனிதர்களின் முழுமையான கொண்டாட்டமாக இருக்கும்'' என்கிறார் ரஹ்மான்.




