'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் |

பூடானில் இருந்து விலை உயர்ந்த கார்களை இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்ததாக கூறி கேரளாவில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் விலை உயர்ந்த லேண்ட்ரோவர் காரும் ஒன்று.. ஆனால் இந்த கார்களை தான் முறைப்படி அனைத்து வரிகளையும் செலுத்தி வாங்கியுள்ளதாக துல்கர் சல்மான் கூறியதுடன் அந்த கார்களை வழக்கை காரணம் காட்டி பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அவை சில காலத்திலேயே பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாக சீர் கெட்டுவிடும் எனவே அந்த கார்களை தன்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து பதில் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சுங்கத்துறை அதிகாரிகள் துல்கர் சல்மானின் லேண்ட் ரோவர் காரை அவரிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர். அதே சமயம் இந்த காரை முறைப்படி அனுமதி இல்லாமல் எங்கேயும் கொண்டு செல்லக்கூடாது.. விசாரணையின் போது தேவைப்பட்ட நேரத்தில் வாகனத்தை அதிகாரிகள் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் இந்த காரை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.




