ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறும் ஸ்ரீலீலா | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஜூன் 27ல் ரிலீஸ் | ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் |
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இசையமைப்பாளர்களில் இளையராஜாவும், ஏஆர் ரஹ்மானும் சாதனையாளர்களாக பார்க்கப்படுபவர்கள். ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்தவர் இளையராஜா, ஆஸ்கர் விருது வாங்கியவர் ரஹ்மான்.
இளையராஜாவிடம் பணி புரிந்தவர் தான் ரகுமான் என்பதும் பலருக்கும் தெரியும். கடந்த இரண்டு நாட்களாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா. அவர் கொடுத்த பேட்டியை பலரும் பதிவிட்டார்கள்.
அவரது பேட்டியில் பேசியதில் முக்கியமான விஷயமாக, “ஒரு பாடல் புதிதாக பூத்த மலர் போன்று இருக்க வேண்டும்,” என்பது பலராலும் ரசிக்கப்பட்டது. ஒரு பாடலும், இசையும் எப்படி இருக்க வேண்டும் என்றும் இளையராஜா கருத்து தெரிவித்திருந்தார்.
அதனால் ஈர்க்கப்பட்டுத் தான் ஏஆர் ரஹ்மான், இளையராஜாவின் பேட்டியை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இளையராஜா பேட்டியை ரஹ்மான் டுவீட் செய்தது ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்து. பலரும் அதைப் பற்றி தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
அவர்களில் இளையராஜாவின் தீவிர ரசிகரான நடிகர் தனுஷும் ஒருவர். ரஹ்மானின் டுவீட்டை ரிடுவீட் செய்த தனுஷ், அதில், “இந்த டுவீட்டும், டுவீட்டுக்குள் இருக்கும் விஷயமும்...'” எனக் குறிப்பிட்டு கை கூப்பும் எமோஜியையும், ஹாட்டின் எமோஜியையும் போட்டுள்ளார். இளையராஜா, ரஹ்மான் இருவரையும் மதிக்கும் தனுஷின் பதிவுக்கும் ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.