இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்து நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் லாக்டவுன் காரணமாக பிரபாஸ் ஏற்கனவே நடித்து வந்த படங்கள் தாமதமாகி வந்ததால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் இன்று முதல் அப்படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் தொடங்கியிருக்கிறார் நாக் அஸ்வின். இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச் சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது ஆந்திராவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டிருப்பதால் நாக் அஸ்வினும் பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பை இன்று முதல் ஐதராபாத்தில் தொடங்கியிருக்கிறார். முதல் கட்டமாக பிரபாஸ் கலந்து கொள்ளாத நிலையில் அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் நாக் அஸ்வின். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் - அமிதாப்பச்சன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.