94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! | கலைஞராக இருப்பதே மகிழ்ச்சியை தருகிறது: ஸ்ருதிஹாசன் | இரு வாரங்களில் 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: கவுதம் மேனன் நம்பிக்கை | திருமணம் எப்போது? வெட்கப்பட்டு நழுவிய சாய் தன்ஷிகா | என் மகன் வேத் நடிக்க வருவான்: ரஜினி மகள் சவுந்தர்யா | ஆதரவற்றோர் இல்லத்திற்கு குடும்பத்துடன் சென்று உணவளித்து பாட்டு பாடி மகிழ்வித்த வினித் சீனிவாசன் | 'இருமுடி' படத்தில் ரவி தேஜாவின் ஐயப்ப பக்தர் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் புதிய தகவல் | விமான நிலையத்தில் போட்டோகிராபரை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா மந்தனா |

கர்நாடக மாநில கூர்க் அழகியான ராஷ்மிகா மந்தனா, கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் புகழ் பெற்றவர். சுல்தான், வாரிசு உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 'கன்னட சினிமாவில் அறிமுகமானாலும் என்னை உருவாக்கியது தெலுங்கு திரையுலகம்தான்' என பேட்டியளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் கன்னட படங்களில் அவரை நடிக்க வைக்கக் கூடாது என கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதோட கூர்க் பழங்குடி இனத்திலிருந்து நடிக்க வந்த முதல் நடிகை நான்தான் என்றும் ஒரு பேட்டியில் கூற அதுவும் சர்ச்சையாகி, உங்களுக்கு முன்பே நிறைய பேர் சாதித்திருக்கிறார்கள் என்று ஆதாரத்தோடு தகவல்களை வெளியிட்டனர்.
இந்த பிரச்சினைகளை தொடர்ந்து அவர் கன்னட படத்தில் நடிப்பதுமில்லை, நடிக்க யாரும் அழைப்பதுமில்லை. இதுகுறித்து ராஷ்மிகா மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் "தொழில்முறை விமர்சனம் வரவேற்கத்தக்கது. ஆனால் தனிப்பட்ட அவதூறுகள் தவறு. நாம் மாற்றிக் கொள்ள வேண்டியதை சொன்னால் அதைக் கருத்தில் கொண்டு வேலை செய்வோம். யார் எனக்கு தடை விதிக்கிறார்களோ அவர்களிடம் சென்று ஏன் அவருக்கு தடை விதிக்கிறீர்கள், அவர் என்ன தவறு செய்தார் என்று கேளுங்கள்''.
இவ்வாறு ராஷ்மிகா கூறியுள்ளார்.