பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், ஹேஷம் அப்துல் வகாப் இசையமைப்பில், ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ், ரோகிணி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தி கேர்ள் பிரண்ட்'. இப்படத்தை நவம்பர் 7ம் தேதி வெளியிடுவதாக சற்று முன் வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் கடந்த வருடம் டிசம்பர் மாதமே வெளியிடப்பட்டது. கொஞ்சம் தாமதமான உருவாக்கத்தால் பட வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. தற்போது அனைத்து வேலைகளையும் முடித்து படத்தின் வெளியீட்டை அறிவித்துள்ளார்கள்.
இந்தப் படத்தை ராஷ்மிகா பெரிதும் நம்பியுள்ளார். அவருக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம் இது. இப்படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் குடும்பத் தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் தயாரித்துள்ளது.