'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி | ஹீரோக்களை ஓரங்கட்டிய பிசாசு நடிகை | அரசியல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர் | பிளாஷ்பேக்: சிவாஜி - சவுகார் ஜானகி இணைந்து நடித்த முதல் திரைக்காவியம் “படிக்காத மேதை” | திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா லாரன்ஸ்? ஜூன் 11ல் முக்கிய அறிவிப்பு | 'திரிஷ்யம்-3' ஹிந்தி பதிப்பு மாறுபட்ட கதை: அஜய் தேவ்கன் |

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் வெளியான ‛தி கேர்ள் பிரண்ட்' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக டாக்ஸிக் மனப்பான்மை கொண்ட ஆண்களிடம் இருந்து பெண்கள் எப்படி தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு படிப்பினையை தருவதாக இந்த படத்தின் கருத்து அமைந்துள்ளது பெண் ரசிகர்களிடம் அதிக பாராட்டை பெற்று வருகிறது. இந்த உற்சாகத்தில் இருக்கும் நடிகை ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது கொரியன் திரைப்படங்களில் நடிப்பதற்கு, தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, “கொரோனா காலகட்டத்தில் தான் கொரியன் படங்கள் பார்க்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு கொரியன் வெப் சீரிஸும் கிட்டத்தட்ட 16 மணி நேரம் ஓடக்கூடிய மொத்தம் 16 எபிசோடுகள் அடங்கியதாக இருந்தது. அதனால் கொரியன் படங்களின் மீதான ஆர்வம் எனக்குள் இயல்பாகவே உள்ளே நுழைந்து விட்டது. அதேசமயம் கொரியன் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் அதில் எனக்கு கொடுக்கப்படும் நல்ல கதாபாத்திரங்களை பொருத்து தான் அதை தேர்ந்தெடுப்பேன். நான் எவ்வளவு செலக்டிவாக கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் என்று உங்களுக்கே தெரியும் இல்லையா ?” என கூறியுள்ளார் ராஷ்மிகா.