தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத் தலைப்பு சிக்மா என நேற்று அறிவிக்கப்பட்டது. படத்தின் புதிய போஸ்டரும் வெளியானது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடவில்லை. சோஷியல் மீடியாவில் பெரிய அளவு ஆதரவு தெரிவிக்கவில்லை. இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்தால், "எங்களுக்கு எந்த அறிவிப்பு வரவில்லை. அப்பா, மகன் உறவு குறித்து சரிவர புரியவில்லை. மகன் படம் குறித்து இதுவரை விஜய் பேசவில்லை. வாழ்த்தி ஒரு அறிக்கை, வீடியோ வெளியிடவில்லை. அதை மகனும் விரும்பவில்லை. ஆகவே சிக்மா விஷயத்தில் நாங்களும் அமைதியாக இருக்கிறோம். வருங்காலத்தில் அவர் வாழ்த்தி, எங்களையும் வாழ்த்த சொன்னால் அதை செய்வோம்.
அப்பா ஆதரவு இல்லாமல் சஞ்சய் தனியாக ஜெயிக்க விரும்புகிறார் போலும். இப்போது உள்ள இளைஞர்கள் தனித்துவமாக இருக்க விரும்புகிறார்கள். விஜய் மட்டுமல்ல, அவரை அறிமுகப்படுத்தி ஆளாக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் கூட பேரன் படம் குறித்து எதையும் பேசவில்லை, இதுவரை வாழ்த்தவில்லையே என்கிறார்கள். சிக்மா பட விழாவுக்காவது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி வருகிறார்களா என தெரியவில்லை. கோலிவுட்டில் எந்த வாரிசுக்கும் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதில்லை. ஏனிந்த புறகணிப்பு என புரியவில்லை என்ற குரலும் கேட்கிறது.