‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி | டிரெயின் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | கிரிசில்டா குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: கோர்ட்டில் ரங்கராஜ் மனு | பிளாஷ்பேக்: தோல்வி பயத்தில் டைட்டிலை மாற்றிய டி.ஆர்.மகாலிங்கம் |

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத் தலைப்பு சிக்மா என நேற்று அறிவிக்கப்பட்டது. படத்தின் புதிய போஸ்டரும் வெளியானது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடவில்லை. சோஷியல் மீடியாவில் பெரிய அளவு ஆதரவு தெரிவிக்கவில்லை. இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்தால், "எங்களுக்கு எந்த அறிவிப்பு வரவில்லை. அப்பா, மகன் உறவு குறித்து சரிவர புரியவில்லை. மகன் படம் குறித்து இதுவரை விஜய் பேசவில்லை. வாழ்த்தி ஒரு அறிக்கை, வீடியோ வெளியிடவில்லை. அதை மகனும் விரும்பவில்லை. ஆகவே சிக்மா விஷயத்தில் நாங்களும் அமைதியாக இருக்கிறோம். வருங்காலத்தில் அவர் வாழ்த்தி, எங்களையும் வாழ்த்த சொன்னால் அதை செய்வோம்.
அப்பா ஆதரவு இல்லாமல் சஞ்சய் தனியாக ஜெயிக்க விரும்புகிறார் போலும். இப்போது உள்ள இளைஞர்கள் தனித்துவமாக இருக்க விரும்புகிறார்கள். விஜய் மட்டுமல்ல, அவரை அறிமுகப்படுத்தி ஆளாக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் கூட பேரன் படம் குறித்து எதையும் பேசவில்லை, இதுவரை வாழ்த்தவில்லையே என்கிறார்கள். சிக்மா பட விழாவுக்காவது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி வருகிறார்களா என தெரியவில்லை. கோலிவுட்டில் எந்த வாரிசுக்கும் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதில்லை. ஏனிந்த புறகணிப்பு என புரியவில்லை என்ற குரலும் கேட்கிறது.




