இந்தியன் 2 கதை இந்தக் காலத்திற்கும் பொருந்தும் - ஷங்கர் | 'சலார்' வசூலைக் கடந்த 'கல்கி 2898 ஏடி' | கல்யாணக் கேள்விகள் : எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன் | ஆகஸ்ட்டில் வெளியாகும் 'டிமான்டி காலனி 2' | 'சட்னி - சாம்பார்' சீரிஸின் டீசர் வெளியானது : விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியீடு | தாய்மொழியில் பேசிய ராஷ்மிகா : குழம்பிப்போன ரசிகர்கள் | திலீப்பின் மூன்று படங்களையும் கைவிட்ட ஓடிடி நிறுவனங்கள் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து பண மோசடி சர்ச்சையில் சிக்கிய ஆர்டிஎக்ஸ் தயாரிப்பாளர் | புதிய வீட்டில் குடியேறிய நயன்தாரா | 'இந்தியன் 2'வில் ரஜினி குறித்து விமர்சனமா? - கமல் பதில் |
தமிழில் வெளியான 'வேதாளம்' படம், தெலுங்கில் 'போலோ சங்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதில் அஜித் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவி நடித்திருந்தார். இந்த படம் தோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்திருக்கும் நிலையிலும் சிரஞ்சீவி தனது சம்பளத்தை கண்டிப்புடன் கேட்டு வாங்கினார் என்றும், தயாரிப்பாளர் தனது வீட்டை விற்று சம்பளத்தை கொடுத்தார் என்றும் தகவல்கள் வெளியானது. இதனை தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் 10 கோடியை சிரஞ்சீவி திருப்பி கொடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கு சிரஞ்சீவிக்கு 60 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. முதல் கட்டமாக 50 கோடி வழங்கப்பட்டதாகவும், இரண்டாவது தவணையாக 10 கோடிக்கு காசோலை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் இரண்டாவது தவணையாக பெறப்பட்ட 10 கோடி ரூபாய்க்கான காசோலையை தயாரிப்பாளருக்கு சிரஞ்சீவி திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.