ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் ‛விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அஜித்தும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். நேற்று திடீரென அஜித் சென்னை திரும்பினார். எதற்காக அவர் சென்னை வந்தார், படப்பிடிப்பு முடிந்துவிட்டதா, இல்லை மீண்டும் படப்பிடிப்பு நின்றதா என பல கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் அஜித் சென்னை திரும்பியதன் காரணம் தெரிய வந்துள்ளது. அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சிறிய அளவிலான ஆபரேஷன் நடந்துள்ளது. அதற்காகவே அவர் சென்னை திரும்பி உள்ளார். இன்று(ஜூலை 3) காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த ஆபரேஷன் நடந்துள்ளது. ஷாலினி உடன் மருத்துவமனையில் அஜித் இருக்கும் போட்டோ வலைதளங்களில் வைரலானது.
எதற்காக ஷாலினிக்கு ஆபரேஷன் நடந்தது என்ற விபரம் வெளியாகவில்லை.