சிறையில் அடைக்க சொன்ன டாக்டர் : சமந்தா பதிலடி | மூன்று மணி நேரம் ஓடப் போகும் 'இந்தியன் 2' | சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி இணையும் படத்தின் டைட்டில் பாஸ்? | கர்ப்ப காலத்தில் யோகா செய்த தீபிகா படுகோனே | கவுண்டம்பாளையம் ரிலீஸ் தள்ளிவைப்பு : படத்தை திரையிட விடாமல் மிரட்டுவதாக ரஞ்சித் புகார் | சார்-ல் இணைந்து பாடிய ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி | டீன்ஸ் கிராபிக்ஸ் : கோவை போலீசில் புகார் அளித்த பார்த்திபன் | விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த யாரும் அனுமதி பெறவில்லை : தேமுதிக., | விஜய், மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் கோமல் சர்மா | வானத்தில் பறந்த இந்தியன் கொடி |
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் ‛விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அஜித்தும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். நேற்று திடீரென அஜித் சென்னை திரும்பினார். எதற்காக அவர் சென்னை வந்தார், படப்பிடிப்பு முடிந்துவிட்டதா, இல்லை மீண்டும் படப்பிடிப்பு நின்றதா என பல கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் அஜித் சென்னை திரும்பியதன் காரணம் தெரிய வந்துள்ளது. அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சிறிய அளவிலான ஆபரேஷன் நடந்துள்ளது. அதற்காகவே அவர் சென்னை திரும்பி உள்ளார். இன்று(ஜூலை 3) காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த ஆபரேஷன் நடந்துள்ளது. ஷாலினி உடன் மருத்துவமனையில் அஜித் இருக்கும் போட்டோ வலைதளங்களில் வைரலானது.
எதற்காக ஷாலினிக்கு ஆபரேஷன் நடந்தது என்ற விபரம் வெளியாகவில்லை.