அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த படம் தற்போதைக்கு 'ஏஏ-22 ஏ-6' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதாவது அல்லு அர்ஜூனின் 22வது படம், அட்லியின் 6வது படம். இந்த படத்தில் தீபிகா படுகோனேவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தீபிகாவின் கணவரான நடிகர் ரன்வீர் சிங் தான் அளித்த ஒரு பேட்டியில், இயக்குனர் அட்லியை மசாலாவின் ராஜா என்று பாராட்டியுள்ளார். அதோடு அட்லியின் தனித்துவமான பார்வை மற்றும் படைப்பாற்றல் மிகச் சிறப்பாக உள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் அவர் இயக்கி வரும் படத்தில் சிலிர்ப்பூட்டும் காட்சிகள் மற்றும் இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத கதையுடன் ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்கப் போகிறது.
விஜய் நடிப்பில் அவர் இயக்கிய 'மெர்சல்' படத்திலிருந்தே நான் அட்லியின் ரசிகராகி விட்டேன். இந்திய சினிமாவில் மிகவும் உற்சாகமாக திறமையான ஒரு இயக்குனர் அட்லி. எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார் ரன்வீர் சிங்.