பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? | நடிகையை பிளாக்மெயில் செய்த பாய் பிரண்ட் | பிளாஷ்பேக்: பாடல் பதிவிற்குப் பின் நடனக் காட்சியை படமாக்கும் முறையை அறிமுகப்படுத்திய “அசோக்குமார்” | இளம் பெண் அமைச்சரை வாழ்த்திய நடிகை ரேவதி | முன்னாள் முதல்வரை சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ் | விஜய் முதல்வர் ஆனதால் பொறாமையா? அதிமுக-திமுக கூட்டணிக்கு முயன்றேனா? : ரஜினிகாந்த் விளக்கம் | 'கருப்பு' வெற்றி: ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் நன்றி சொன்ன சூர்யா | ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் |

ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த படம் தற்போதைக்கு 'ஏஏ-22 ஏ-6' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதாவது அல்லு அர்ஜூனின் 22வது படம், அட்லியின் 6வது படம். இந்த படத்தில் தீபிகா படுகோனேவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தீபிகாவின் கணவரான நடிகர் ரன்வீர் சிங் தான் அளித்த ஒரு பேட்டியில், இயக்குனர் அட்லியை மசாலாவின் ராஜா என்று பாராட்டியுள்ளார். அதோடு அட்லியின் தனித்துவமான பார்வை மற்றும் படைப்பாற்றல் மிகச் சிறப்பாக உள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் அவர் இயக்கி வரும் படத்தில் சிலிர்ப்பூட்டும் காட்சிகள் மற்றும் இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத கதையுடன் ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்கப் போகிறது.
விஜய் நடிப்பில் அவர் இயக்கிய 'மெர்சல்' படத்திலிருந்தே நான் அட்லியின் ரசிகராகி விட்டேன். இந்திய சினிமாவில் மிகவும் உற்சாகமாக திறமையான ஒரு இயக்குனர் அட்லி. எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார் ரன்வீர் சிங்.