முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் தயாராகும் 'மரகத நாணயம் 2' | 'ஜனநாயகன்' வழக்கு நாளை, ஜனவரி 20ல் மீண்டும் விசாரணை | யஷ், பிரபாஸ் பாணியில் விஜய் சேதுபதி | 2026ம் ஆண்டிலும் தொடரும் வாராவார வெளியீடுகள் | பிளாஷ்பேக் : 'பேசும் படம்' உருவான கதை | பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் மட்டும் வில்லனாக நடித்த எம்.கே. ராதா | பொங்கல் விடுமுறை நிறைவு : புதிய படங்களின் நிலவரம்… | 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' |

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர ஜோடி ரன்வீர் சிங், தீபிகா படுகோனே. இருவரும் காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'துவா' எனப் பெயர் வைத்ததாக பின்னர் தெரிவித்தார்கள்.
சினிமா பிரபலங்கள் யாரும் சீக்கிரத்தில் அவர்களது குழந்தைகளை வெளி உலகத்திற்கு காண்பிப்பதில்லை. பிரைவசி காரணமாக அவற்றைத் தவிர்த்து வருவார்கள்.
மகாராஷ்டிராவில் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு தீபிகா, ரன்வீர் தம்பதியினர் தங்களது குழந்தையை நேற்று அறிமுகப்படுத்தி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சில புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டனர். அந்தப் பதிவிற்கு பத்து மணி நேரத்திலேயே ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக 'ஸ்பிரிட், கல்கி 2898 ஏடி' ஆகிய தெலுங்குப் படங்களிலிருந்து தீபிகா நீக்கப்பட்டது சர்ச்சையானது. இருந்தாலும் தீபிகா மீது இவ்வளவு பேர் அன்பாக இருந்து லைக் கொடுத்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
தீபிகா தற்போது அட்லி - அல்லு அர்ஜுன் படத்திலும், ஷாரூக் ஜோடியாக 'கிங்' படத்திலும் நடித்து வருகிறார். ரன்வீர் சிங் 'துரந்தர்' படத்தில் நடிக்க உள்ளார்.