விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம் | நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? |

1985ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 'பியார் ஜக்தா நகின்'. இந்தியாவின் 7 மொழிகளில் இது ரீமேக் ஆனது. கன்னட இயக்குனர் துவாரகீஷ் இதனை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார். தனது நண்பரான ரஜினியை சந்தித்து தனது திட்டத்தை கூறினார்.
ஏற்கெனவே படத்தை பார்த்திருந்த ரஜினி, உடனே அதற்கு சம்மதித்தார். அதற்கு அவர் வைத்த ஒரே நிபந்தனை படத்தின் நாயகியாக ஸ்ரீதேவி நடிக்க வேண்டும் என்பதுதான். அப்போது ஸ்ரீதேவி ஹிந்தியில் பிசியாக இருந்தால் அது சாத்தியமில்லை என்று கூறிவிட்டார் துவாரகீஷ்.
இந்தி படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய 'தும்சே மில்கர் நா ஜனா' பாடல் அப்படியே இடம் பெற வேண்டும், அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த பாட்டுக்கு நானும் ஸ்ரீதேவியும் இணைந்து நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே எனக்கு வரும். அதனால் ஸ்ரீதேவியிடம் நானே பேசுகிறேன் என்று கூறினார் ரஜினி.
அதன்படி ஸ்ரீதேவியுடன் பேசிய ரஜினி உடனேயே அவர் தனது ஹிந்திப் பட தேதிகளை ஒதுக்கி வைத்து விட்டு நடித்தார். அந்த படம்தான் 'நான் அடிமை இல்லை'. இந்த படத்தில் அதே 'மிஸ்ரா சிவரஞ்சனி' ராகத்தில் ஒரு ஜீவன் தான் பாடல், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜானகி குரலில், விஜய் ஆனந்த் இசையில் உருவானது. அதோடு எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், ஜானகியும் தனித்தனியாகவும் இந்த பாடலை பாடினார். படத்தில் 3 இடத்தில் இந்த பாடல் இடம் பெற்றது.




